
By : Hyder Ali
பிரிமேசன் மற்றும் இலுமினாடிகள் இவர்களின் செயற்பாடுகள்; அதன் பின்னிகள் பற்றிய ஆய்வின் தொடரில் இன்று
கிறித்தவம் கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட வரலாறு
கிறித்தவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை Part 2 ல் பார்த்தோம். கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இன்று பார்ப்போம்.
ஈசா நபி jesus (PBUH) உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயேஅவர் கொண்டுவந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுவிட்டது
யார் இந்தப் Paul பவுல்? வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர். இவரின் உண்மையான பெயர் Saul of tasus. இது கிரேக்க மொழிப் பெயராகும். கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார். இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்டபட்டது. திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார். ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.
தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும்போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார். கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார். இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.
கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம். நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது.(யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே. இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும். புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.
லுசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது.
1. முதலில் நல்லது என்ற போர்வையில் நவீனத்தை (பித்அத்தை) தோற்றுவித்தல்
2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்
3. அப்படியே குப்ருக்கள்(இறை மறுப்பு) கொண்டுசெல்லல்.
அத்தோடு அவ்வேதம் அழிந்துவிடும்.
இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான். இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள். வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.
நவீனத்தை (பித்அத்தை) தோற்றுவிப்பது எவ்வாறு?
இதே வடிவில்தான்; Paul பவுல் இஞ்சீல் வேதத்தை அழித்தார். மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும். அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும். Paul ஈசா Jesus (PBUH) நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல். ஈசாவோடு சேர்த்து எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார். இதன் காரணம் பின்னர் விளங்கும். ஈசா நபி Jesus (PBUH யினதும் அவர் தாயினதும் களங்கத்தை நீக்க கடவுளையே ஈசா Jesus (PBUH) நபியின் அப்பாவாக்கினார். ஈசா நபியின் Jesus (PBUH) மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் Jesus (PBUH) தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.
இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?
வரலாற்றில் சைத்தானியர்கள் (லுசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழிக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம்தான். கடவுள் ஒன்று என்பதை உடைக்க ஒரேயடியாக பலகடவுள் என்று சொல்ல முடியாது. மூடலாக ஆரம்பிக்க வேண்டும்.”மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று” என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம்.
திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.
உதாரணம்
1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, athena, apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.
2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய(புத்தரின் 3 உடம்பு)
3. பண்டைய எகிப்தில் osiris, isis, horus
4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.
5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி
6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்
7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்
8. டாவோசியத்தில் fu, lu, shou
இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு.
இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே. இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருதவேண்டும்.
மதங்கள் சைத்தானியக் கூட்டத்தால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைச் சொல்லவும் அதற்கு உதாரணமாக கிறித்தவ மதத்தைக் காட்டவுமே இங்கு இந்த கிறித்தவ வரலாறு பேசப்பட்டது.
நான் இங்கு கூறியது கிறித்தவ வரலாற்றின் மிக மிக சிறிய சுருக்கமான பகுதியே. கிறிஸ்தவப் பிரிவுகள், கொள்கைக் குழப்பங்கள், நபிகளார் காலத்தில் இருந்த கிறிஸ்தவம் (Eastern authodox christianity) போன்ற நிறைய சுவாரசியமான தகவல்கள் உண்டு. அநேகமானவை எம்மால் இன்னும் படிக்கப்படாமலே இருக்கிறது.
No comments:
Post a Comment